குலதெய்வ கோவிலுக்கு சென்று வரும்போது சோகம்... ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் மரணம்.!
Chennai Poonamallee Family Members died Accident in Maduranthakam
லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பி சென்னை நோக்கி வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் வாகனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வருகையில் விபத்திற்குள்ளாகியது.
அவ்வழியாக வந்த லாரியொன்று, காரின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுனர் என ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Poonamallee Family Members died Accident in Maduranthakam