கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொடூர கொலை.. விசாரணையில் காவல்துறை.!
Chennai Ponnamallee Kattupakkam College girl Meena Murder Police Investigation
சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியை சார்ந்த பெண்மணி மீனா (வயது 23). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக மீனா, தனது பாட்டியின் இல்லம் உள்ள போரூரில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், மீனா தனது இல்லலத்திற்கு வந்த நிலையில், அவர் மர்ம நபர்கள் மூலமாக கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும், மாணவி எதற்காக கொலை செய்யப்பட்டார்? காதல் பிரச்சனையால் இக்கொலை அரங்கேறியதா? என்பது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Ponnamallee Kattupakkam College girl Meena Murder Police Investigation