ரூட்டு தலன்னு எவனாச்சும் வந்தீங்க.. சென்னை காவல்துறை உச்சகட்ட எச்சரிக்கை.!
Chennai Police Warn by Route Thala College Students
சென்னை நகரில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் அடாவடி செயலில் ஈடுபடும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. நாளை முதலாக கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வார்கள் என்ற நிலையில், முன்னதாக செயல்பாட்டில் இருந்த பெரும் பிரச்சினையான ரூட்டு தல இப்போதும் துவங்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.
இதனையடுத்து ரூட் தல என்ற பெயரில் பேருந்தில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்து வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் என்ற போர்வையில் பேருந்துகளில் கலாட்டா செய்யும் சமூக விரோதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Police Warn by Route Thala College Students