ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. திருட்டு புள்ளிங்கோசுக்கு ஆப்படித்த சென்னை காவல்துறை.. தி.நகரில் துவக்கம்.!
Chennai Police gives safe dress to save jewels for visiting T Nagar women
பண்டிகை காலங்கள் வந்தாலே மக்களுக்கு மகிழ்ச்சியும் சேர்ந்து வந்துவிடும். பண்டிகைகளை தங்களின் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட கடைகளுக்கு சென்று வருவது வழக்கமான விஷயமாகும்.
கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான ஆடைகள், அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வருவார்கள். இவ்வாறாக கடைகளுக்கு செல்கையில், பண்டிகைகால பரபரப்பை கருத்தில் கொண்டு திருட்டு தொழில் செய்யும் நபர்களும் கழுத்தில் உள்ள நகை, அலைபேசி, பணம் போன்றவற்றை திருடி செல்ல வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் பண்டிகை காலத்தில் தி.நகர் பகுதியில் மக்களின் கூட்டம் அதிகம் இருக்கும். இங்கு மக்களின் பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு சென்னை காவல் துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது தி.நகர் பகுதிக்கு வரும் பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள நகைகள் வெளியே தெரியாத வகையில் இருக்கும் பொருட்டு, மேல் கவச ஆடைகளை சென்னை காவல் துறையினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Police gives safe dress to save jewels for visiting T Nagar women