நான் தான் கொரோனா... வெளில வந்தா உங்கள கட்டிப்பிடிச்சு சாப்டுடுவேன்.. கொரோனா ஹெல்மட்டுடன் விழிப்புணர்வு பணியில் சென்னை காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று வரை கரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. இவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பிய நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

மக்கள் அதிகளவில் அனாவசியமாக சுற்றி வருவதால் காவல் துறையினர் பல அதிரடி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு அரசு அனுமதி செய்துள்ளது. 

மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பல முறைகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தை ஆய்வாளர் ரமேஷ்பாபு என்பவர் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில், கொரணோ உருவம் போன்ற தலைக்கவசம் அணிந்து வந்து அறிவுறுத்தி எச்சரித்து அனுப்பினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai police awareness with corona helmet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->