#சென்னை | மகனை காப்பற்ற போலீஸ் மீது மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்ய முயன்ற பெண் கைது! - Seithipunal
Seithipunal


கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி தெரிந்த வாலிபரை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, மண்ணெண்ணெய் ஊற்றிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை : அருகம்பாக்கம் ராமசாமி ராஜா தெருவை சேர்ந்தவர் வினோத். 31 வயதாகும் இவர் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, வினோத் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வினோத்தை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் வினோத் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.

உடனடியாக போலீசார் அவரை துரத்தி சென்றபோது, வினோத்தின் தாயார் லதா (55 வயது) போலீசாரை தடுத்து நிறுத்தி தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை போலீசார் மீது ஊற்றி, தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனை எடுத்து உதவி ஆய்வாளர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மருத்துவமனைக்கு சக போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் லதாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI POLICE ARREST AMINTHAKARAI LADY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->