பீனிக்ஸ் மால் சென்ற நபர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பீனிக்ஸ் மால் சென்ற நபர்களுக்கு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பில், சென்னையில் இருக்கும் பீனிக்ஸ் மாலுக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை சென்ற நபர்கள் கவனமாக இருக்க எச்சரித்துள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் உதவி மருத்துவ அலைபேசி எங்களையும் வழங்கியுள்ளது.

இதன்படி, பீனிக்ஸ் மாலுக்கு சென்ற நபர்கள் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்து ஆலோசனை கேட்கும் பட்சத்தில் தனிமைப்படுத்துதல் மற்றும் பிற உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் மாலில் பணியாற்றி வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவ உதவி எண்கள் 044 2538 4520 மற்றும் 044 4612 2300 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai phoenix mall visited peoples stay alert


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->