சென்னையில் கை, கால் தனியாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் இவரா..? திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்ட போலீசார்.!
chennai-perungudi-murder-case-identity-woman-who-was-killed-inquiry
சென்னை பெருங்குடியில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பதற்காக, குப்பையைக் கிளறுவது வழக்கம்.
அப்படிக் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தவர்கள் கையில், ஒரு வசதியான இளம் பெண்ணின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிவந்த கால்கள் மற்றும் ஒரு கை மட்டும் தனியே கிடந்ததைக் கண்டு அலறினார்கள்.
உடனடியாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தந்தார்கள்.உடனே அங்கு விரைந்தார்கள் காவல் துறையினர். அந்தக் கால்களையும், கையையும் ஆய்வு செய்தனர். வலது கையில் தங்கச் செயின் மற்றும் 2 பட்டாம் பூச்சிகள், டிராகன் படம் பச்சை குத்தப் பட்டிருந்தது. உடல் பாகங்களைப் பார்த்த போது, 30 வயதிற்குள் உள்ள இளம் பெண் என்பது தெரிந்தது.
அழகிய சிவப்பான கால் விரல்களில் மெட்டி அணிவிக்கப் பட்டிருந்தது. கை தேர்ந்த டாக்டர்கள் அல்லது, கறி வெட்டுபவர்கள் தான், இந்த மாதிரி ஒரு உடலை வெட்ட முடியும், என்று போலீசார் கருத்து கூறினார்கள்.
இந்தக் குப்பை, சென்னை 10-வது மண்டலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குப்பையில் தான், இந்த உடல் பாகங்களைப் போட்டிருக்கிறார்கள்.
இந்த கால்கள் மற்றும் கைக்குச் சொந்தமான உடல் மற்றும் தலை எங்கே? யார் இப்படி ஒரு கொலையைச் செய்து, உடலை வெட்டித் துண்டாக்கி குப்பையில் போட்டது? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில், அந்த உடல் யாருடையது என்பது தெரிய வந்துள்ளது.
துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என பள்ளிக்கரணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்துவந்த சந்தியா என்ற அந்த பெண் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலகிருஷ்ணனின் மனைவியான சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஐந்து முறை வீட்டை விட்டும் வெளியேறி இருக்கிறார்.
இதுகுறித்து பலமுறை பாலகிருஷ்ணன் எச்சரித்தும் சந்தியா கேட்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை வெட்டி கொன்று உடல் பாகங்களை வீசி எறிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
chennai-perungudi-murder-case-identity-woman-who-was-killed-inquiry