தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜன் மீது குண்டாஸ்..!
Chennai Paris Corner Athlete Trainer Nagarajan Goonda Act 27 June 2021
சென்னையில் உள்ள பாரிமுனை பகுதியில் இருக்கும் தடகளப்பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் எழுந்தது. சுமார் 20 க்கும் மேற்பட்ட தடகள வீராங்கனைகள் நாகராஜனின் மீது பாலியல் புகார் அளித்தனர்.
இந்த தகவலும் இணையத்தில் வெளியாகி காவல் துறையினரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விளக்கமளிக்க பூக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகராஜனுக்கு எதிராக ஒரு மாணவி எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 5 ஆம் தேதி காவல் துறையினரால் நாகராஜன் கைது செய்யப்பட்டான். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவனின் மீது குண்டர் சட்டம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்ட நிலையில், தடகள பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜனும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான். நாகராஜன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Paris Corner Athlete Trainer Nagarajan Goonda Act 27 June 2021