ஆசை ஆசையாய் காதல்.. எங்க வீட்டு பொண்ணு என உருட்டி திருமணம்.. வரதட்சணை, சந்தேக கொடுமையால் இறுதியில் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


முறைமாமன் மீது மலர்ந்த பள்ளி பருவ காதல் இறுதியில் வரதட்சணை கொடுமை செய்யவைத்து, பெண் தற்கொலைக்கு காரணமாக அமைந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. 

சென்னையில் உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். தனியார் நிறுவனத்தில் ஷேர் மார்க்கெட் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவனது மனைவி சினேகா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆகும் நிலையில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சினேகா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 

சினேகாவை சமாதானம் செய்த பெற்றோர் மீண்டும் மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவத்தன்று உருவான பிரச்சனையால் மனமுடைந்து போன சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சினேகாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரிக்கையில், சினேகாவும் அவரது கணவரான பிரமோத் என்பவரும்  பள்ளிப் பருவத்திலேயே காதல் கொண்டதும், சினேகாவின் முறைமாமனாக பிரமோத்தின் மீது சினேகா அளவுகடந்த பாசம் வைத்திருந்ததும் தெரியவந்தது. 

சினேகாவின் தாயும்-தந்தையும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தாய் வழியில் உள்ள முறை மாமன் உறவு கொண்ட பிரமோத் மீது சினேகாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர சினேகா தயாராக இருந்தபோது, சினேகாவை பெண் பார்க்க வந்த பிரமோத்தின் குடும்பத்தினர், தனது மகனுக்கு இன்னும் சில மாதங்களில் செவ்வாய் தோஷம் தொடங்க உள்ளது., அதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளவேண்டும்., இல்லையென்றால் சினேகா ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று கதையை அள்ளி விட்டுள்ளனர்.

இந்த கதையை நம்பிய சினேகாவின் குடும்பத்தினர், சினேகாவின் திருமண ஆசையை புரிந்துகொண்ட வேறு வேறு வழியின்றி திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். சினேகா எங்க வீட்டு பெண் மாதிரி, வரதட்சணை வேண்டாம், உள்ளதை கொடுத்தால் போதும் என்று பிரமோத்தின் தரப்பு முதலில் தெரிவித்துள்ளார். பெண் வீட்டார் சார்பாக திருமணத்தின் போது 15 சவரன் நகை மற்றும் இரண்டரை இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வைத்து கோவிலில் திருமணம் செய்துள்ளனர். 

திருமணம் முடிந்த அன்றைய இரவே சீர் வரிசை பாத்திரங்கள் சரியாக இல்லை என்று கூறி மாமியார் பிரச்சனையை தொடங்கியுள்ளார். திருமணத்தின்போது ரொக்கமாக கொடுத்த இரண்டு இலட்சம் ரூபாயில் ஒன்றரை இலட்சம் ரூபாயை புதிய பைக் வாங்கிக் கொண்ட காதல் கணவர் பிரமோத், மீதி பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி இழந்துள்ளார். இதனால் வரதட்சனையை கூடுதலாக கேட்டு பிரச்சனை செய்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் காதல் கணவரான முறைமாமன் இப்படி மாறி விட்டானே என்று சினேகா வேதனையில் இருந்துள்ளார். 

இதனை பெற்றோருக்கும் தெரியப்படுத்திய நிலையில், மனைவியின் செல்போனை எடுத்து யார் யாருடன் பேசுகிறார் என்று கேட்டு அடித்து உதைக்க ஆரம்பித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்த சினேகாவை, சமாதானம் செய்வது போல நடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் வைத்து யார் யாருடன் பேசினாய் என்று கேட்டுள்ளார். 

அண்ணன் முறை கொண்ட உறவினர்களிடம் சினேகா பேசியிருந்த நிலையில், அந்த சந்தேக காதல் கணவன் என்ற கொடூரன் சினேகாவை நாக்கூசும் வார்த்தையால் சகட்டுமேனிக்கு பேசி மனதுடைய வைத்துள்ளான். ஆசை ஆசையாய் காதலித்து கரம்பிடித்த முறைமாமன், வெறும் வரதட்சணைக்கும் உடல் தேவைக்கும் தன்னை திருமணம் செய்துகொண்டது தெரியவந்து மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிய சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

  • ஒரு ஜாதி காதலோ, வேறு ஜாதி காதலோ, எதுவாக இருந்தாலும் பள்ளி பருவ, பதின்ம வயது காதல் என்ன மாதிரியான விபரித நிலைக்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதற்கு இதுபோன்ற பல இளம்பெண்களின் மரணமே சாட்சி.. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Panaiyur Woman Sineka Married his own love Uncle He Culprit Dowry and doubt Torture Finally she Suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->