கர்ப்பிணி பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொடூரர்கள் கைது.!
Chennai Pallavaram Pregnant girl Chain Snatching Culprits Arrest 16 April 2021
சென்னையில் உள்ள தாம்பரம் ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர் பகுதியை சார்ந்த கீதா (வயது 24) என்ற பெண்மணியிடம், கடந்த 9 ஆம் தேதி சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றது. வீட்டின் காம்பவுண்ட் சுவரில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகரை தரிசனம் செய்கையில், அவ்வழியாக வந்த கொடூரன் இந்த சம்பவத்தை அரங்கேற்றினான்.
நிலைகுலைந்து போன கீதா சத்தமிட்டு சங்கிலியை இறுக பற்றிக்கொள்ளவே, கொள்ளையன் அவரை தரதரவென இழுத்து சென்றான். இதனைகண்டுகொண்டு இருந்த பலரும் பயம் காரணமாக உதவ முன்வராத நிலையில், இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல் துறையினர், மதுரையை சார்ந்த கொள்ளையன் தினேஷ் என்ற வாலிபர் இதனை அரங்கேற்றியிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, இருசக்கர வாகனத்தை இயக்கிய தினேஷின் நண்பன் தேனி மாவட்டத்தை சார்ந்த கிரண் குமார் என்பதையும் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 75 வயது மூதாட்டியை கீழே தள்ளி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது. தனிப்படை அமைத்து விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினருக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Pallavaram Pregnant girl Chain Snatching Culprits Arrest 16 April 2021