கடத்தல் தங்கத்தை கடத்த ஸ்கெட்ச்.. கனவில் பிளான் போட்டு, நனவில் போலீசிடம் சிக்கிய விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள்.!
Chennai Pallavaram Police Arrest Gold Smuggling Gang They are Works at Contract Employee of Chennai Airport
கடத்தல் தங்கத்தை கடத்த பிளான் போட்டு போலீசிடம் சிக்கிக்கொண்ட கும்பலில் தலைமறைவாக உள்ளவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனகாபுத்தூர் பகுதியை சார்ந்தவர் சரவணன் (வயது 28). இவர் விமான நிறுவனத்திற்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தன்னை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி, தனது செல்போன் மற்றும் இருசக்கர வாகனம், 8 பார்சல்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டதாக கடந்த 23 ஆம் தேதி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், 8 பார்சல் குறித்து கேட்கையில் சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சரவணனின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில், பார்சலில் தங்க கட்டிகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், துபாயில் இருந்து வந்த தங்கக்கட்டியை தனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரான் என்பவரிடம் ஒப்படைக்க சென்றபோது, நண்பர்களுடன் சேர்ந்து அதனை அபகரிக்க நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது குறித்த தகவல் பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
விசாரணையின் முடிவில், சரவணனுடன் பணியாற்றி வரும் பிரபு ராம் (வயது 37), விமான நிலைய சோதனை பிரிவு ஊழியர் முகமது நஷீத் (வயது 25) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தும் நபர்களுக்கு உதவி செய்தது அம்பலமானது. மேலும், அவ்வாறு சம்பவத்தன்று வந்த தங்கத்தை அபகரிக்க நினைத்து கடத்தல் நாடகத்தில் எடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் நாடகத்திற்கு திருவெல்லிக்கேணி பகுதியை சார்ந்த ஷேக் முகமது, அவரது நண்பர் இஸ்மாயில் மற்றும் மணி ஆகியோரை சேர்த்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களான ஷேக், இஸ்மாயில், மணி, இம்ரான் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Pallavaram Police Arrest Gold Smuggling Gang They are Works at Contract Employee of Chennai Airport