ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதில் அரசியல் தகராறு.. தேமுதிக பிரமுகர் கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதியை சார்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவர் டெய்லர் கடை நடத்தி வரும் நிலையில், தேமுதிக நகர துணை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு, தனது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்தார். 

இவர், அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே செல்கையில், அவரது வாகனத்தை மறித்த இரண்டு பேர் கத்தியை வைத்து ராஜ்குமாரை வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றது. இது தொடர்பான தகவலை அறிந்த சங்கர் நகர் காவல் துறையினர், ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், சதீஷ் (வயது 27) மற்றும் ரஞ்சித் குமார் என்ற சின்னான்டி (வயது 30) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், அனகாபுத்தூர் லேபர் பள்ளி பகுதியை சார்ந்த அரசியல் பிரமுகருக்கு ரஞ்சித் உதவியாக இருந்து வந்துள்ளார். 

இவர், ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்த நிலையில், அப்பகுதியில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து விதியை மீறி கட்டிடம் கட்டியிருந்த நபருக்கு ராஜ்குமார் ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.

இந்த வாக்குவாதத்தால் ஏற்பட்ட முன்பகை காரணமாக ராஜ்குமாரை ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர் சதீஷ் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலைக்கு தூண்டிவிட்ட அரசியல் பிரமுகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இதனால் ஏற்பட்ட நிலத்தகராறில் அந்த அரசியல் பிரமுகர் ராஜ்குமாரை கொலை செய்யும்படி ரஞ்சித்குமாரை தூண்டி விட்டுள்ளார். இதையடுத்து, ரஞ்சித்குமார் தனது நண்பர் காட்டன் சதீசுடன் சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு பல்லாவரம் சந்தைக்கு சென்று, கத்தியை வாங்கி வந்துள்ளார். பின்னர் வீட்டில் மறைத்து வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Pallavaram Anakaputhur DMDK Supporter Murder Case police Investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->