#சென்னை பல்லாவரம் || மகன் கண்முனையே அரங்கேறிய கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


பல்லாவரம் அருகே மகன் கண்முன்னேயே தந்தை வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பல்லாவரம் - பம்மல் மெயின் ரோட்டில் அஜய் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், அவரின் தந்தை குப்பன் உடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அஜய் திடீரென தனது இரு சக்கர வாகனத்தின் பிரேக்கை பிடித்ததால், அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி குப்பனின் தலை மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லாவரம் - பம்மல் இடையிலான பிரதான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai pallavaram accident kuppan dead


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->