பத்ம சேஷாத்ரி பள்ளி ராஜகோபாலன் மீது குண்டர் - சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், இரட்டை அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாசமாக பேசுதல், வீடியோ கால் செய்தல், இணையவகுப்பில் அரைகுறை ஆடையுடன் தோன்றுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறான். 

இவனது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவி, இது தொடர்பான விஷயத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். விசாரணையில், காமுகன் மீது பள்ளியில் பயின்று வந்த முன்னாள் மாணவிகளும் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பத்ம ஷேசாத்ரி பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் கடந்த 24 ஆம் தேதி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உத்தரவின் பேரில், பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் காமக்கொடூரன் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Padma Seshadri school Teacher Rajagopalan Under Prison by Goonda Act


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->