ஆட்சி மாற்றம் உருவானதும்., சென்னையில் அதிரடி மாற்றத்தை ஏற்ப்படுத்திய முதல்வர்.!
Chennai New Commissioner
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப்பின் திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் இருந்தார். தற்போது, மாநகராட்சி ஆணையராக சுகன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர்கள், முதல்வரின் செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் போன்ற பலரும் மாற்றப்பட்டுக் கொண்டு வந்திருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.