குடும்ப சூழ்நிலையால் திருந்தி, பணிக்கு சென்ற முன்னால் புள்ளிங்கோவிற்கு அரங்கேறிய சோகம்.!! விரோதிகள் வெறிச்செயல்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படைப்பை ஆதனஞ்சேரி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தெரு பகுதியை சார்ந்தவர் அஜய் பிரசாத் (வயது 20). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 29 ஆம் தேதியன்று அஜய் பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், அங்குள்ள வாலாஜாபாத் - வண்டலூர் சாலையில் வந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அஜய்யை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. 

இந்த விஷயம் தொடர்பாக மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அஜய் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக ரவுடி கும்பலுடன் பழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த கும்பலில் இருந்த அஜய்யின் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த அப்பத்தா என்கிற விக்கி (வயது 23), செங்கல்பட்டு தையூர் பகுதியை சார்ந்த சார்புமணி (வயது 20), தி.மலை மாவட்டத்தை சார்ந்த சின்னா என்கிற விக்னேஷ் (வயது 20), பள்ளு என்கிற சந்துரு (வயது 20), படைப்பை அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்த மணிகண்டன் (வயது 22) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், அப்பத்தா படப்பையில் தங்கியிருந்து கியாஸ் கம்பெனியில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த மே மாதம் ஆதனஞ்சேரி விக்கி மற்றும் நணபர்களுடன் மது அருந்தியுள்ளார். இந்த நேரத்தில், அவ்வழியாக சென்ற அஜய்யிடம் வம்பிழுக்கவே, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் திருந்தி வேலைக்கு சென்ற அஜய் பிரகாஷை கூட்டாளிகளியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Murder Police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->