தாயுடன் கள்ளக்காதல்.. மகனின் விபரீத முடிவு.. அரங்கேறிய வெறிச்செயல்.!! - Seithipunal
Seithipunal


தாயுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த நபரை, மகன் கொலை செய்தது குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த பெண்மணி செல்வி. இவர் கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவரது இளையமகன் வேலாயுதம். 

செல்விக்கு, போரூர் பகுதியை சார்ந்த முனியாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் செல்வியின் மகனிற்கு தெரியவரவே, முனியாண்டியை பலமுறை எச்சரித்துள்ளான். ஆனால், முனியாண்டி, செல்வியுடன் கொண்ட பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம், முனியாண்டியை கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் வேலாயுதத்தையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai murder case police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->