கணவரின் நினைவுகள் தினமும் வர.. 13 வயது மகளுடன், தாய் எடுத்த விபரீத முடிவு.. அரங்கேறிய கண்ணீர் சோகம்.!!
Chennai Mother and daughter suicide attempt police investigation
தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள கீழ்கட்டளை துரைசாமி நகர் பகுதியை சார்ந்தவர் பிரபாவதி (வயது 47). இவரது கணவரான கோவிந்தசாமி கடந்த 5 வருடத்திற்கு முன்னர் இறந்துள்ளார். இந்த தம்பதியின் மகள் சொப்னா (வயது 13).
சொப்னா அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கீழ்கட்டளை பகுதியில் வசித்து வந்த ப்ரபாவதியின் தந்தை செல்வராஜ் (வயது 84), தனது மகள் மற்றும் பேத்தியை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய தினத்தில் செல்வராஜ் தனது மகளின் இல்லத்திற்கு வருகையில், கதவு தாழிடப்பட்டு இருந்துள்ளது. மேலும், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததன் காரணமாக ஜன்னல் வழியாக எட்டி பார்க்கையில், தனது மகள் மட்டும் பேத்தி ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இவர் பதற்றத்தில் அலறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்ததில் விஷயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொள்ளயில், கணவர் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Mother and daughter suicide attempt police investigation