ஊர்க்காவல் படை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.. சரியான வேலை கிடைக்காத விரக்தி?.!
Chennai Mogappair Home Guard Officer Arun Pandian Suicide At Home 14 Oct 2021
ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த அதிகாரி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சார்ந்தவர் அருண் பாண்டியன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் படுக்கை அறையில் உறங்க சென்றவர், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்க்கையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, இதுகுறித்து ஜெ.ஜெ நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அருண் பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், இளநிலை பட்டதாரி அருண் பாண்டியன், சரியான வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Mogappair Home Guard Officer Arun Pandian Suicide At Home 14 Oct 2021