நாயின் இரண்டு கால்களை அடித்து உதைத்து கொடூர கொலை.. மரணித்துப்போன மனிதம்.. அரங்கேறிய கொடூரம்.!
Chennai Mangadu Dog Murder by Anti Social Men
சென்னையில் உள்ள மாங்காடு கெருகம்பாக்கம் பகுதியை சார்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவர் தினமும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினமும் நாய்க்கு சாப்பாடு வைத்துள்ளார்.
ஆனால், நாய் வழக்கம்போல வரவில்லை. நாயை தேடுகையில், தனியார் நிறுவனத்திற்கும் 2 கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும், முகத்தில் இருந்தும் இரத்த வழிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை செய்கையில், நிறுவனத்திற்குள் நாய் புகுந்து தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்த ராஜேஷ், கீர்த்தி, ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் அடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சத்யராஜ் அனுமதி செய்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சத்யராஜ் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Mangadu Dog Murder by Anti Social Men