செல்போனை பறித்து சென்ற ரௌடி.. ஜாமினில் வந்ததும் ஸ்கெட்ச் போட்டு, சம்பவம் செய்த சகோதரர்கள்.!
Chennai Manali Rowdy Rajasekaran Ails Kutty Murder by Brothers Sathish and Vignesh
அண்ணன் தம்பியிடம் செல்போன் பறித்து சென்ற ரௌடியை, சகோதரர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள மணலி, எடப்பாளையம் ஜீவானந்தம் தெருவை சார்ந்தவர் இராஜசேகரன் என்ற குட்டி (வயது 27). இவன் ரௌடியாக அப்பகுதியில் வளம் வந்த நிலையில், குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கடந்த வாரம் நிபந்தனை ஜாமின் பெற்ற குட்டி, வெளியே வந்த நிலையில், தினமும் மணலி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் கையெழுத்திட்டு வந்துள்ளான்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மணலி அருகேயுள்ள சேக்காடு பார்த்தசாரதி தெருவில் இருக்கும் மைதானத்தில் இராஜசேகரன் மதுபானம் அருந்தியுள்ளான். இதன்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் இராஜசேகரனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிச்சாய்த்து இருக்கின்றனர். இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இராஜசேகரனை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணலி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்குள்ளாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இராஜசேகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மணலி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
விசாரணையில், கடந்த மாதம் ரௌடி இராஜசேகரன், அவனது நண்பர் ஜெயக்குமார் ஆகியோர் சேர்ந்து, அப்துல் கலாம் நகரை சார்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 26) மற்றும் அவரது தம்பி சதீஷ் (வயது 25) ஆகியோரை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் விக்கி மற்றும் சதீஷ் இராஜசேகரனை வெட்டி கொலை செய்தது அம்பலமானது. விக்கி மற்றும் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Manali Rowdy Rajasekaran Ails Kutty Murder by Brothers Sathish and Vignesh