காதலியை பார்க்க சென்று, 45 அடி கிணற்றில் புதையல் தேடிய காதலன்.. சிறப்பான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணியப்ப தெரு பகுதியை சார்ந்தவர் ஜீலான் (வயது 22). இவர் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினத்தின் போது, இவரது ந்நண்பர் பிறந்தநாள் விழாவிற்கு ஒரகடம் சென்றுள்ளார். 

பின்னர் திரும்பும் வழியிலேயே இவரது காதலியின் இல்லம் இருக்கும் சூழலில், காதலியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் தனது காதலியின் இல்லத்திற்குள் சத்தமே இல்லாமல் நுழைந்துள்ளார். 

அப்போது அங்கு யாரோ ஒருவர் வருவது போல சத்தம் கேட்ட நிலையில், ஜீலான் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்த நேரத்தில், நீரின்றி வறண்டு இருந்த 45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்து ஐயோ.. அம்மா.. காப்பாற்றுகள் என்று காதல் கோட்டை ஜீலான் கதறியுள்ளார். 

இந்த சத்தத்தை கேட்டு காதலி மற்றும் அவரின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் விரைந்துள்ளனர். பின்னர் கிணற்றில் மன்மத காதலன் அகப்பட்டு இருப்பதை அறிந்துகொண்டு, அம்பத்தூர் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கிணற்றுக்குள் இறங்கி படுகாயமடைந்த ஜீலானி மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai man slipped in well when illegally meeting attempt love girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->