காதல் ஜோடியின் அன்பு, வாட்சப் மெசேஜால் முடிந்த சோகம்.. அரங்கேறிய பரிதாபம்.!!
Chennai Love Married couple attempt suiicide
சென்னையில் உள்ள பல்லாவரம் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் என்ற பிரவீன் குமார் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள ஈஷா பல்லாவரத்தை சார்ந்தவர் தீபிகா (வயது 19). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் 8 தேதி திருமணம் செய்துள்ளனர்.
இதன் பின்னர் பல்லாவரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், பெற்றோரை அழைத்து காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இதன் பின்னர் இருவரும் பிரவீன்குமார் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில், ஆடி மாதம் என்பதால் கடந்த 20 ஆம் தேதி தீபிகா அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 10 நாட்களாக தாய் வீட்டிலிருந்து தீபிகா, கடந்த 30ஆம் தேதி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் தந்தை சந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. திருமணமாகி இரண்டரை மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.
இது தொடர்பாக காவல் துறையினர் பிரவீன் குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில், " மனைவி தீபிகா என்னிடம் அன்பாக தான் இருந்தார் என்றும், அவரது வீட்டிற்குச் சென்ற பிறகு என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டார் என்றும், வேலையாக இருப்பதால் போன் எடுக்க முடியாமல், மெசேஜ் செய்யும் படியும் கூறினேன். அவர் மெசேஜ் செய்தபின்னர் நான் கவனிக்காததால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முயற்சிக்கையில், பெண் வீட்டுத் தரப்பில் கோபமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் பரிந்துரை செய்ததை அடுத்து, அங்கு செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் தனது மனைவியின் இறப்பு தாங்காமல் பிரவீன் குமார் நேற்று உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Love Married couple attempt suiicide