கணவனை இழந்த சோகம்.. தாய், 2 மகள்களுடன் தற்கொலை முயற்சி..! கொரோனாவின் கோரத்தாண்டவங்கள்.!!
Chennai Kondithope Mother and 2 Daughter Suicide Attempt due to Feeling Sad 17 May 2021
சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 52). இவர் அரிசி வியாபாரியாக இருந்து வருகிறார். இவரது மனைவி புவனா (வயது 48). இவர்கள் இருவருக்கும் ரம்யா என்ற 24 வயது மகளும், ஆர்த்தி என்ற 22 வயது மகளும் உள்ளனர்.
மூத்த மகள் ரம்யா பல் மருத்துவராக இருந்து வரும் நிலையில், ரம்யா மற்றும் ஆர்த்தி இருவருக்கும் திருமணம் முடியவில்லை. இந்நிலையில், சுரேஷ் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவரின் இழப்பை தாங்க இயலாது புவனா பித்துப்பிடித்தார் போல இருந்து வந்த நிலையில், தந்தையை இழந்த துக்கத்தில் ரம்யா மற்றும் ஆர்த்தி மிகுந்த சோகத்தில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் மூவருக்கும் உறவினர் தினமும் சாப்பாடு சமைத்து கொடுத்து ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல தனது வீட்டில் சமைத்த உணவை தாய், மகள்களுக்கு கொடுக்க உறவினர் புவனாவின் வீட்டிற்கு சென்ற நிலையில், கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக 2 மகள்கள் மற்றும் தாய் என மூவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் மூவரும் தூக்க மாத்திரை அதிகளவு சாப்பிட்டது உறுதியானது.
இதனையடுத்து, மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், மூவரும் மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக ஏழுகிணறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Kondithope Mother and 2 Daughter Suicide Attempt due to Feeling Sad 17 May 2021