கல்லூரி மாணவியை ஆபாசமாக படம்பிடித்த காமுக டி.டி.ஆர்.. அரக்கோணத்தில் கொடூரம்.!
Chennai Kolathur girl video abuse Traveling Coimbatore to Chennai Travel By Train In Arakonam
சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்மணி, கோவையில் இருக்கும் கல்லூரியில் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில், கோவையிலிருந்து சேரன் அதிவிரைவு இரயில் மூலமாக சென்னை வந்து கொண்டிருந்துள்ளார்.
நேற்று அதிகாலை நேரத்தில் இரயில் அரக்கோணம் இரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது, மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில், கழிவறையின் வெளியே நின்ற பயணச்சீட்டு பரிசோதகர், மாணவியை அலைபேசியில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த மாணவி அலறவே, சக பயணிகள் அதிர்ச்சியடைந்து விரைந்து சென்று மாணவியிடம் விசாரித்துள்ளனர். பயணசீட்டு பரிசோதகரின் அலைபேசியை பார்த்த சக பயணிகள், அதில் மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக இரயில்வே உதவி எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவே, இரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், தயாராக இருந்த இரயில்வே காவல்துறையினர் பயணசீட்டு பரிசோதகரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த விசாரணையில், அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சார்ந்த மேகநாதன் என்பதும் தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காவல் துறையினர், மத்திய சிறையில் காமுகனை அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Kolathur girl video abuse Traveling Coimbatore to Chennai Travel By Train In Arakonam