முகநூல் வாயிலாக ஓரினசேர்கைக்கு அழைப்பு.. விரைந்து சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பகீர்.!
Chennai Kodungaiyur Police Arrest Homo Sex Invited Robbery Gang by Facebook
முகநூலில் ஓரினசேர்கைக்கு அழைப்பு விடுத்ததை நம்பி சென்ற இளைஞரிடம் வழிப்பறி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சார்ந்தவர் ஐயப்பன். இவருக்கு முகநூல் வாயிலாக மூலக்கடை பகுதியை சார்ந்த மோனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மோனிஷ் ஐயப்பனை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை நம்பி பகட்டான ஆடை மற்றும் இருசக்கர வாகனத்தில் விரைந்து புறப்பட்டு சென்ற ஐயப்பனிற்கு பெரும் அதிர்ச்சியாக, மோனிஷின் நண்பர்கள் வழிபறிக்காக காத்திருந்துள்ளனர். ஐயப்பன் சம்பவ இடத்திற்கு வந்ததும் கத்தி முனையில் மிரட்டி இருசக்கர வாகனம், பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது.
இதனையடுத்து ஏமாற்றமடைந்த ஐயப்பன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மோனிஷ் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், படையப்பா, விஜயகுமார் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், முகநூலில் ஓரினசேர்க்கை விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்து வழிப்பறி செய்தது அம்பலமானது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Kodungaiyur Police Arrest Homo Sex Invited Robbery Gang by Facebook