தனியாக வரும் பெண்களை குறிவைத்து அத்துமீறும் கஞ்சா புள்ளிங்கோஸ்.. என்ன செய்கிறது சென்னை காவல் துறை?..!
Chennai Kanja Pullingow Sexual torture girl Police Investigation
சென்னையில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில், ரவுடிசம் மற்றும் புள்ளிங்கோஸ் அட்டூழியமும் சேர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னையில் உள்ள நெல்சமாணிக்கம் சாலையில் இருந்து அண்ணா நகரை நோக்கி யோகா ஆசிரியராக பணியாற்றி வரும் பெண்மணி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.
இவரை பின்தொடர்ந்து வந்த கஞ்சா பிடித்திருந்த அரைவேக்காடு புள்ளிங்கோஸ், இருசக்கர வாகனத்தில் இருந்தவாறே பெண்மணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயந்துபோன பெண்மணி வாகனத்தை நிறுத்திய நிலையில், இறங்கி வந்து சில்மிஷம் செய்து தப்பி சென்றுள்ளனர்.
பெரும் பதற்றத்திற்கு உள்ளாகிய ஆசிரியை, பாலத்தின் இறக்கத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த காவல் துறை அதிகாரியிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வைத்தே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், சம்பவ இடத்தில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது போன்ற காமுக தெறுபொறுக்கி புள்ளிங்கோஸ் அதிகளவு சென்னையில் உலா வரும் நிலையில், வெளியே சொன்னால் அவமானம் என்று கருதி புகார் அளிப்பதில்லை.
அதிகாலை எழுந்ததும் கஞ்சாவினை புகைத்துவிட்டு, கஞ்சா போதையில் பெண்களுக்கு எதிரான செயல்கள், திருட்டு, வழிப்பறி போன்ற செயலையும் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களுக்கே இதுபோன்ற நிலைமை என்றால், தனியாக நடந்து வரும் பெண்கள் இவர்களின் பிடியில் சிக்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதை என்ன கூட இயலவில்லை என்றும், அதுபோன்ற குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே காவல் துறையினர் சுதாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனியாக வந்த பெண் காவலரிடம் அத்துமீறி, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் இதனைப்போன்ற புள்ளிங்கோஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Kanja Pullingow Sexual torture girl Police Investigation