ஆன்லைன் லோன் ஆப்.. கடனை கட்டிய பின்னும் டார்ச்சர்.. உயிரை விட்ட சென்னை இளைஞர்.!  - Seithipunal
Seithipunal


ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடி பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுக்கும். சிலர் ஆன்லைன் கடன் செயலில் கடன் வாங்கி அதன் மூலம் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

இந்த நிலையில், சென்னையில் ஆன்லைன் கடன் செயலிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான நரேந்திரன் என்பவர் மன உளைச்சலால் தூக்கு போட்டு தற்கொலை கொண்டுள்ளார். 

3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் கடன் செயலி மூலமாக கடன் வாங்கிய நரேந்திரன், அதை திருப்பி செலுத்தி இருக்கின்றார். ஆனால்,  கடன் கொடுத்த செயலி நிறுவனம், அவரிடம் மேலும், 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க சொல்லி வற்புறுத்தி இருக்கின்றனர். 

அவர்களது மிரட்டலை தொடந்து நரேந்திரன் 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய பின்னும், கடனை கட்டசொல்லி தொலைபேசியில் மிரட்டியதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai it boy death by online loan app


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->