கள்ளகாதலன் வீட்டிற்கு சென்று குடித்தனம்.. கொளுத்திவிட்ட கணவன்.. சென்னையில் பரபரப்பு.!!
Chennai Illegal affair couple murder police arrest
தமிழகத்தின் சென்னையில் உள்ள சூளைக்குப்பம் அன்பானந்தம் மூன்றாவது தெரு பகுதியை சார்ந்தவர் செந்தில்முருகன் (வயது 38). இவரது மனைவி இலட்சுமி (வயது 34). இவர்களுக்கு பெண் குழந்தை இருக்கிறது. செந்தில்முருகன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருபவர் கோவிந்தசாமி (வயது 62). இலட்சுமிக்கும், கோவிந்தசாமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து அறிந்த செந்தில்முருகன் மனைவியை கண்டிக்கவே, இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலட்சுமி வீட்டினை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய இலட்சுமி, கோவிந்தசாமியின் இல்லத்திற்கு சென்று குடும்பம் நடந்த துவங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் செந்தில்முருகன் கோவிந்தசாமியின் இல்லத்திற்கு சென்று கதவை தட்டவே, கோவிந்தசாமி கதவை திறந்துள்ளார். பின்னர் தான் கொண்டு சென்ற பெட்ரோலை இருவரின் மீதும் ஊற்றி தீவைத்து தப்பி சென்றுள்ளார்.
கோவிந்தசாமி மற்றும் இலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் நேற்று மாலை நேரத்தில் இலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கோவிந்தசாமியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில், செந்தில் முருகனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Illegal affair couple murder police arrest