காதல் திருமணம்.. வரதட்சணை கொடுமை.. கள்ளக்காதல்.. பறிபோன பெண்ணின் பார்வை.!
Chennai Husband Murder attempt Wife due to Affair and Dowry
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் உல்வாயல் தெரு பகுதியை சார்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 30). இவரது மனைவி சித்ரா (வயது 29). இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், லோகேஸ்வரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளான். மேலும், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளான். லோகேஸ்வரிக்கும் - மற்றொரு பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக தம்பதிகளுக்குள் கடந்த 25 ஆம் தேதி தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் கையில் இருந்த அலைபேசியை மனைவியின் முகத்தில் வீசியுள்ளான். கண்களில் அலைபேசிபட்டு அலறித்துடித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு மருத்துவர்கள் செய்த சோதனையில், அவருக்கு கண்பார்வை பறிபோனது தெரியவந்துள்ளது. இடது கண் பார்வை முற்றிலும் பறிபோன நிலையில், இது தொடர்பாக வடபழனி மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Husband Murder attempt Wife due to Affair and Dowry