தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! நாள் குறித்த நீதிபதிகள்!!
chennai high court question for tn govt
ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பொன்ராஜ், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு வந்த போது, ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
chennai high court question for tn govt