சென்னைக்கு கடல் கடந்து வந்து வானிலை செய்தி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்.!!
chennai have a rain norway weather report announce that
தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த ஆறரை மாதங்களாகவே மழையில்லாமல் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டது. இதனால் கடுமையான தண்ணீர் பஞ்சமனாது தலைவிரித்தாடியது. இதுமட்டுமல்லாது தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக மக்கள் கடுமையான அவதியடைந்தனர். உணவு விடுதிகளில் கூட பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது.
இந்த நிலையில்., கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாது அவ்வப்போது பெய்யும் மழையால் தண்ணீர் பஞ்சமும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில்., நேற்றைய தினத்தில் தலைநகரான சென்னையில் உள்ள கிண்டி, வளசரவாக்கம், ராமாவரம், தியாகராஜ நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் திடீரென நள்ளிரவில் மழை பெய்ததை அடுத்து மக்கள் நல்ல மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த சமயத்தில் நார்வே நாட்டின் வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள தகவலின் படி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நள்ளிரவு திடீர் கனமழை பெய்யலாம் என்றும், வரும் மூன்று நாட்களுக்கு இதனை போன்று நல்ல மழை பெரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சம் சரியாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
chennai have a rain norway weather report announce that