சென்னையில் பேருந்து கண்ணாடி உடைப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை பாரிமுனையில் இருந்து கே.கே நகருக்கு நேற்று மாலை மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. 

அப்பேருந்து மேற்கு மாம்பலம் வழியே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பேருந்து ஓட்டுனருடன் தகராறில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து திடீரென சாலையில் கிடந்த கற்களை எடுத்து பேருந்து மீது சரமாரியாக வீசினர். இதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. 

இந்த விவகாரம் குறித்து அசோக் நகர காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Govt Bus Glass Broken


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->