அதிகரிக்கும் அலைபேசி மோகம் தற்கொலை.. சென்னையில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சூளைமேடு ஆர்.பி.ஐ பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜான்சன். இவர் கேரள மாநிலத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில், பணியிட மாறுதல் காரணமாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்னதாக குடும்பத்துடன் சென்னைக்கு விரைந்துள்ளார். 

இவருக்கு பிரான்சி மெதிலா என்ற 15 வயதுடைய மகள் உள்ள நிலையில், இவர் கேரளாவில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். பிரான்சி மெதிலா நேற்று முன்தினத்தின் இரவு குடும்பத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

பின்னர் அவரது அண்ணனிடம் அலைபேசியில் விளையாட கோரிக்கை வைத்து, அலைபேசியை கேட்டுள்ளார். இதற்கு பிரான்சி மெதிலாவின் அண்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரான்சி மெதிலா அறையின் கதவை தாளிட்டுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டில் இருந்து கதவை திறக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்க்கையில், பிரான்சி மெதிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற சேர்க்கையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl suicide due to mobile not use allowed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->