அடர்ந்த இருட்டு.. மகளை காணாது தேடியலைந்த பெற்றோர்.. காட்டுப்பகுதியில் அரங்கேறவிருந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஸ்ரீபெரும்புத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் படப்பை சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியை சார்ந்தவர் ஆரோன் ஜெயக்குமார் (வயது 23).

இவர் ஆட்டோ ஓட்டி பணிசெய்து வந்த நிலையில், இதே பகுதியில் 14 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை ஜெயக்குமார் காதல் வலையில் வீழ்த்திய நிலையில், சிறுமியை கடந்த 5 மாதமாக காதலித்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், நேற்று சிறுமியை இரவு நேரத்தில் அழைத்த காமுகன், அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். தங்களின் மகளை காணாது பெற்றோர்கள் தேடியலைந்து பெரும் பதைபதைப்பிற்கு உள்ளாகினர். 

இவர்கள் இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றதை அறிந்த பெற்றோர்கள், ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விஷயத்தை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியை காமுகனின் பிடியில் இருந்து மீட்டனர். 

மேலும், ஆரோன் விஜயகுமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl sexual torture by love boy police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->