சென்னை மாணவிக்கு இங்கிலாந்தில் லவ் ஜிகாத்?... கண்ணீரில் பெற்றோர்.. சர்ச்சையில் சிக்கிய மதபோதகர்.!!
Chennai girl kidnapped in England Using Love Jihad
சென்னையில் உள்ள ராயபுரம் பகுதி சார்ந்த செல்வந்தரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்க சென்ற நிலையில், கடந்த மே மாதம் 28 ஆம் தேதி மாயமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் தந்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், கடத்தல் கும்பல் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், தீவிரவாத கும்பல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன பெண்ணின் தந்தை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ள துவங்கியது. இதில் பல திடுக்கிடும் தகவலும் வெளியானது.
வங்கதேசத்தை சேர்ந்த நபீஸ் என்ற நபர், மதபோதகர் ஜாகிர் நாயக்குடன் சேர்ந்து சென்னை மனைவியை லண்டனில் கடத்தியதும், அவரை மிரட்டி மதமாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது. இக்கடத்தலில் ஈடுபட்ட நபீஸ், வங்கதேச அரசியல்வாதியின் மகன் என்பதும், சென்னை மாணவியின் குடும்பத்தினரிடம் பணம் வாங்க இந்த கடத்தலில் நடத்தப்பட்டதா? அல்லது பாலியல் அடிமையாக மாற்றுவதற்கு இந்த கடத்தல் நடத்தப்பட்டதா? என்பது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாகிர் நாயக் எந்த அடிப்படையில் கடத்தலுக்கு துணை போயிருக்கிறார் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கடத்தலுக்கு பின்னணியில் லவ் ஜிகாத் தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai girl kidnapped in England Using Love Jihad