அடிதடி தகராறு... திமுக பிரமுகரின் பல்லை உடைத்த இளைஞர்கள்..!
Chennai gang fight police investigation
சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் லஷ்கர் தெரு பகுதியை சார்ந்தவர்கள் அமீது (வயது 22), ரஷீத் (வயது 24). இவர்கள் இருவரும் ஆலந்தூரில் உள்ள ஜால் தெரு பகுதியில் உள்ள உறவினரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள குடியிருப்பு பகுதியில் சிறுநீர் கழித்ததாக தெரியவருகிறது..
இதனைக்கண்ட அப்பகுதியை சார்ந்த பத்மநாபன் (வயது 65) மற்றும் திமுக மாணவர் அணியை சார்ந்த தீனதயாளன் ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற அமீது மற்றும் ரஷீத், தங்களின் நண்பர்கள் ஐந்து பேரை அழைத்து வந்து தீனதயாளனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். தீனதயாளனிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தாரும் இணைந்துள்ளனர்.
இதனால் அங்கு வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படவே, இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டுள்ளனர். இதில், தீனதயாளனின் முகத்தில் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டதால், அவரது 3 பற்கள் உடைந்துள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரஷீத் மற்றும் அமிதை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai gang fight police investigation