நடைப்பயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகரை சரமாரியாக வெட்டிய கும்பல்.. சென்னையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மாதவரம் உடையார்தோட்டம் பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). இவர் மாதவரம் பகுதியின் காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் நிலயில், நேற்று காலை நேரத்தில் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில், இரு சக்கரவாகனத்தில் வந்த நபர்கள் வெங்கடேசனின் அலைபேசியை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உதவிக்கு ஆட்களை அழைக்க முயற்சி செய்யவே, வெங்கடேசனை மற்றொருவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இவரது தோள்பட்டை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் விழவே, இவரது அலைபேசியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 

இந்த பதைபதைப்பு சம்பவத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai congress party member murder attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->