என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்..! கல்லூரி உதவி பேராசிரியை வெளியிட்ட பகீர் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான அநீதிகளை குறைப்பதற்கு சட்ட திட்டங்கள் அனைத்தையும் கடுமையாகும் பட்சத்திலேயே பெண் பிள்ளைகளை பாதுகாக்க இயலும். பெண்கள் பல விதமான அச்சுறுத்தலுக்கு மத்தியில் தினமும் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் வண்டலூரில் இருக்கும் கேளம்பாக்கம் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருப்பவர் பபீலா. இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக கல்லூரியில் பணியாற்றி வந்த நிலையில்., கல்லூரியின் பொது மேலாளர் மற்றும் உதவி முதல்வர் போன்ற நிர்வாகத்தினர் மீது பகிரங்கமாக குற்றசாட்டு வைத்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

இவரது குற்றசாட்டை முகநூலில் தெரிவித்துள்ள நிலையில்., அந்த வீடியோ பதிவில்., குறிப்பிட்ட கல்லூரியில் உடல் ரீதியாகவும்., மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி., மிரட்டுவதாகவும்., தன்னை யாரவது காப்பாற்றுமாறும்., தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது என்னை தற்கொலை செய்து கொள்ள கூறி வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் தற்போது இணையதளத்தில் பெரும் வைரலாகி., பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai college teacher release video complaint about college chief


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->