சென்னையில் ரவுடியிசம் எதுவும் கிடையாது - சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால்.!!
Chennai City Police Commissioner Pressmeet about Chennai Police Against Rowdiyisim 2 June 2021
சென்னையின் பிரதான ரவுடியாக அறியப்படும் சி.டி மணி என்ற திருட்டு சி.டி மணிகண்டன் நேற்று காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். நடைபாதை வியாபாரியாக தனது வாழக்கையை தொடங்கிய மணிகண்டன், பின்னாளில் திருட்டு சி.டி ஏகபோகமாக விற்பனை செய்த காலத்தில் சி.டி தொழில் செய்து வந்தான்.
இதனைத்தொடர்ந்து, கொலை செய்வதில் களமிறங்கிய மணிகண்டன் சி.டி மணி என்று அறியப்பட்டு, 8 கொலைகள் 30 கொலை தொடர்புகள் என பல வழக்குகளில் சிக்கினான். இவன் சென்னை காவல்துறையினரால் தேடப்படும் நபராகவும் இருந்து வந்தான். நேற்று சென்னை காவல் துறையினர் இவனை அதிரடியாக கைது செய்தனர்.
காவல் துறையினர் கைது செய்ய முயற்சிக்கையில் காவல்துறை சிறப்பு படை அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறான். இதனால் காயமடைந்த அதிகாரி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், " சீ.டி மணி துப்பாகியால் இரண்டு முறை காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளான். இதனால் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்து இருக்கிறார்.
தங்களை பாதுகாத்துக்கொள்ள பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள். சென்னையில் ரவுடிசம் என்பது கிடையாது " என்று தெரிவித்தார். இதனால் சென்னையில் விரைவில் ரவுடியிசம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai City Police Commissioner Pressmeet about Chennai Police Against Rowdiyisim 2 June 2021