மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி தூக்கிட்டு தற்கொலை..! - Seithipunal
Seithipunal


மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு பகுதியை சார்ந்தவர் ஜெய்சங்கர். இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி இலட்சுமி (வயது 35).

இவர்கள் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டு அயனாவரம் பகுதியில் இருக்கும் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாமல் தனியாக இருந்துள்ளார். 

இதன்போது, யாரும் எதிர்பாராத விதமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த ஜெய்சங்கர், மீண்டும் வீட்டிற்கு வந்த போது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. 

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Chintadripet girl Suicide Police Investigation 27 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->