ரோந்து வாகனத்தில் மோதிய லாரி... 2 காவல் அதிகாரிகள் காயம்.! - Seithipunal
Seithipunal


இரவு கண்காணிப்பில் ஈடுபட்ட வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில், 2 காவலர்கள் காயம் அடைந்தனர்.

சென்னையில் உள்ள தலைமை செயலக காலனி காவல்நிலைய அதிகாரிகள், நேற்று அதிகாலை நேரத்தில் காவல்துறை வாகனத்தில் இரவு நேர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதன்போது, ஐ.சி.எப் காவல் ஆய்வாளர் அழைத்ததன் பேரில், அங்கு சென்று திரும்பிவந்துகொண்டு இருந்தனர். 

இதன்போது, வாகனம் அயனாவரம் காவல் நிலையம் அருகே வருகையில், எதிர்திசையில் இரும்பு பொருட்களை ஏற்றிவந்த லாரி, காவல் அதிகாரிகளின் வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், காவல் வாகனத்தை இயக்கிய ஆயுதப்படை காவல் அதிகாரி சந்திரகுமார் (வயது 25), பெண் காவல் அதிகாரி கலையரசி (வயது 26) ஆகியோர் காயம் அடைந்தனர். 

மேலும், காவல் துறை அதிகாரிகளின் வாகன முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. காயமடைந்த 2 காவல் அதிகாரிகளும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

விசாரணையில், லாரி ஓட்டுநராக பணியாற்றிய இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ராம்லால் ஜட் (வயது 50) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Chief Secretary Area Police Station Jeep Accident Lorry Driver Arrested and Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->