பிரசவத்தின் போது அலட்சியம்?.. நரம்பு துண்டித்து துடிதுடிக்க உயிரிழந்த பச்சிளம் உயிர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஓட்டேரி ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 25). இவர் மயிலாப்பூரில் இருக்கும் பிரான்ஸ் தூதரகத்தில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. லட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கடந்த 21 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து உடனடியாக அங்குள்ள புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினத்தில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. முகம் சற்று வீக்கத்துடன் பெண் குழந்தை பிறந்தது. 

மருத்துவர்களின் அறிவுரைப்படி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தை அனுமதி செய்யப்படவே, மறுநாள் அதிகாலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை கண்டு கதறி அழுத நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் விசாரித்ததில், பிரசவத்தின் போது மூளைக்கு செல்லும் நரம்பு குழந்தைக்கு துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து புளியந்தோப்பு அரசு மருத்துவமனையில் சென்று கேட்கவே சரியான பதில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Baby death due to irresponsible doctors delivery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->