#Breaking: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு... கைதி தூக்கிட்டு தற்கொலை.!!
Chennai Ayanavaram child sexual abuse case culprit Palani commit suicide in puzhal prison
சென்னையில் உள்ள அயனாவரம் தனியார் குடியிருப்பு, 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை தந்தது. மேலும், காவல் துறையினரின் விசாரணையில் சிறுமி பல நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியானது.
இந்த வழக்கு தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமார், முருகேசன் பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீண தயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், உமாபதி மற்றும் ஜெயராமன் ஆகிய 17 பேர் கடந்த ஜூலை 2018 ஆம் வருடத்தில் கைது செய்யப்பட்டனர்.
பல விசாரணைகளுக்கு பின்னர் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரில் பாபு என்பவர் முன்னதாகவே உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அயனாவரம் சிறுமி பலாத்காரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கைதி பழனி (வயது 40) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் காமுகன் பழனி குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில், காமுகன் பழனி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
புழல் கழிவறையில் பின்புறமாக கயிறை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனைக்கண்ட சக கைதிகள் கூச்சலிடவே, காவல் துறையினர் விரைந்து சென்று பழனியை மீட்டு ஸ்டாண்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பழனியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பழனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Ayanavaram child sexual abuse case culprit Palani commit suicide in puzhal prison