பகட்டான ஆடை, நகையுடன் தோழி வீட்டிற்க்கு சென்றவரை வெளுத்துவிட்டு நகை - பணத்தை பறித்த பிராடு கும்பல்.! - Seithipunal
Seithipunal


தோழி கேட்ட கடன் தொகையை கொடுக்க ஆசையாக சென்றவரை அடித்து நொறுக்கி பணம்-நகை பறிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள அடையாறு சாஸ்திரி நகர் பகுதியை சார்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் திருமண நிகழ்ச்சியில் அலங்காரம் செய்வதுடன், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். 

சென்னையில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்ற சமயத்தில், அங்கு வேலைபார்த்து வரும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், பெண் தனது குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பண உதவி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

இதனைக்கேட்ட செந்தில்குமார் ஆவடியை அடுத்துள்ள அண்ணாநகர் லட்சுமி முல்லை தெருவில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பெண் மட்டும் தனியாக இருந்த நிலையில், சிறிது நேரத்தில் அங்கு வந்த 4 பேர் பெண்ணை காரில் ஏற்றி அனுப்பியுள்ளனர். 

பின்னர், செந்தில்குமாரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து, கத்தி மற்றும் கட்டை உள்ளிட்ட ஆயுதத்தால் சரமாரியாக தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். செந்தில் குமார் பகட்டாக அணிந்து வந்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் பணம் போன்றவற்றையும் பறித்துக்கொண்டு, கண்ணைக்கட்டி காரில் ஏற்றி படப்பையை அடுத்துள்ள முடிசூர் பகுதியில் ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். 

காரில் கும்பல் சிட்டாக பார்த்துவிட, அங்கிருந்து தப்பி வந்த செந்தில்குமார் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பட்டாபிராம் பகுதியை சார்ந்த மெக்கானிக் அஜித் (வயது 24), ஆவடி கார் ஓட்டுநர் சரவணன் (வயது 28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக உள்ள பெண் உட்பட சிலரையும் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Avadi Man Kidnapped by Woman and His Gang Robbery Money and Jewels


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->