குட்டையில் இருந்த நீரால் அரங்கேறிய சோகம்.. அக்காள் - தங்கைக்கு ஏற்பட்ட பரிதாபம்.!
Chennai Avadi Cousin Sisters died slipping on Water Pond
சென்னையில் உள்ள ஆவடியை அடுத்துள்ள பெத்தூர் கருமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் தட்க்ஷிணா மூர்த்தி. இவர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மகள் ரதிமீனா (வயது 13). இவர் அங்குள்ள லட்சுமிபுரம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
தட்க்ஷிணா மூர்த்தியின் தம்பி சின்னத்துரை. சின்னத்துரை கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மகள் காயத்ரி (வயது 15). காயத்ரி இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளனர்.
அண்ணன் - தம்பியாக இருந்து வந்த இருவரும், ஒரே இல்லத்தில் தனித்தனி அறையில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் வீட்டினை ஒட்டி இருந்துள்ளது.
இந்த நிலத்தில் ஆங்காங்கே மண்வெட்டி எடுத்துள்ள காரணத்தால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் சமீபத்திய மழையால் தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சி அளித்துள்ளது. இந்த குட்டையில் ரதிமீனா மற்றும் காயத்ரி மாலை நேரத்தில் கை, கால்களை கழுவ முயற்சித்துள்ளனர்.
இதன்போது இருவரும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Avadi Cousin Sisters died slipping on Water Pond