இறப்பிலும் இணைபிரியாத தம்பதி.. சென்னையில் நெகிழ்ச்சி சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள ஆவடி திருமுல்லைவாயல் நேருநகர் பகுதியை சார்ந்தவர் ஏழுமலை (வயது 85). இவரது மனைவி ராஜம்மாள் (வயது 70). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் 3 மகள் உள்ளனர். 

ஏழுமலை அம்பத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடித்தும், ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்தும் வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே வயதான தம்பதிகள் உடல்நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், வைகுண்ட ஏகாதேசியன்று ஏழுமலை திடீரென உயிரிழந்த நிலையில், தந்தையின் இறப்பு செய்தியை தாயாரிடம் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் படுக்கையிலேயே கண்ணீர் வடித்தபடி இருந்துள்ளார்.

இந்த தருணத்தில், ராஜம்மாளும் அன்று இரவு உயிரிழந்துள்ளார். கணவனின் இறப்பு செய்தியை அறிந்த மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Avadi Aged Couple died Same Date 26 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->