சென்னை மாநகர காவல் ஆணையரின் உடல்நிலை எப்படி உள்ளது?. மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர காவல் ஆணையரின் உடல்நிலை சீராக இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வருபவர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று வழக்கம்போல அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி கொண்டு இருந்த மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்த காவல் அதிகாரிகளிடம் விஷயத்தை கூறியுள்ளார். 

உடன் இருந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, அவரை காவல் ஆணையரின் சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவும் இதனை உறுதி செய்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Apollo Hospital Team Announce Chennai City Commissioner Health Status is Good 14 Oct 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->