30 ஆயிரம் மக்கள்.. ரூ.100 கோடி சுருட்டல்.. பிராடு தியாக பிரகாசம் 2 வருடம் கழித்து கைது.!
Chennai Angel Trading Thiyaga Prakasam Arrested after 2 Years Forgery Rs 100 Crore Amount 30 Thousand Peoples
கடந்த 2018 ஆம் வருடம் சமூக வலைத்தளங்களில் 100 நாட்களில் நீங்கள் முதலீடு செய்து பணம் இரட்டிப்பு செய்து தரப்படும், 100 நாட்களில் உலக அதிசயம் என பாமர மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் விளம்பரங்கள் வைரலாகியது. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஏஞ்சல் டிரேடிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த தியாக பிரகாசம் என்ற 53 வயது நபர் இவ்விளம்பரத்தை கொடுத்திருந்தார்.
100 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்ற நப்பாசையில் பொதுமக்களும் அந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த நிலையில், ஏராளமான ஏஜெண்டுகளை நியமனம் செய்து மூளைச்சலவை செய்தும் பணம் வசூல் செய்யப்பட்டது. இவ்வாறு மக்களை மூளைச்சலவை (கேன்வாஸ்) செய்து பணத்தை பெற்றுத்தரும் ஏஜெண்டுகளுக்கு கமிஷன் தொகையும் வழங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 7 மாதத்தில் 30 ஆயிரம் பேரிடம் இருந்து மொத்தமாக ரூ.100 கோடி வசூல் ஆனது.
இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து வசூலான பணத்தை ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் என முதலீடு செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் நீங்கள் செலுத்திய பணம் குறித்து கவலைப்பட வேண்டாம், பணம் கட்டாயம் இரட்டிப்பு செய்து தரப்படும் என தியாக பிரகாசம் தியாகி போல அறிவிப்பு வெளியிட்டான். இதனை நம்பிய பொதுமக்களும் மனதில் பல மாயகோட்டைகளை கட்டிவைத்து காத்திருந்தனர்.
இந்நிலையில், தியாக பிரகாசம் திடீரென கம்பெனியை இழுத்து மூடி தலைமறைவாக, ரூ.100 கோடியை சுருட்டிக்கொண்டு எங்கு சென்றான்? என்பது தெரியாமல் மக்கள் மாயக்கோட்டை மிதப்பில் இருந்து வெளியே வந்தனர். இதன்பின்னர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2 வருடமாக தியாக பிரகாசம் கொள்ளையடித்த பணத்தை வைத்து தலைமறைவாக இருந்துள்ளான்.
தற்போது, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தியாக பிரகாசத்தை கண்டறிய உத்தரவிட, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி மற்றும் துணை ஆணையர் நாகஜோதி, உதவி ஆணையர் சுரேந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தியாகப்ரகாசம் கைது செய்யப்பட்டான். இவனை நீதிமன்ற காவலில் அடைத்த காவல் துறையினர், காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னரே ரூ.100 கோடி என்ன ஆனது? என தெரியவரும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Angel Trading Thiyaga Prakasam Arrested after 2 Years Forgery Rs 100 Crore Amount 30 Thousand Peoples